இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (27) அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே 99 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 8 மரணங்களுடன், இதுவரை 107 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் (26) கொவிட்-19 தொடர்பான (தற்போது அறிவிக்கப்பட்ட இரு மரணங்களுடன்) 3 மரணங்களும் நேற்று முன்தினம் (25) (தற்போது அறிவிக்கப்பட்ட 3 மரணங்களுடன்) 5 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்டவர்களில் 4 பெண்களும் 4 ஆண்களும் உள்ளடங்குவதோடு, இவர்களில் இருவர் இன்றும் (27), இருவர் நேற்றும் (26), மூவர் நேற்றுமுன்தினமும் (25), ஒருவர் கடந்த திங்கட்கிழமையும் (23) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர்கள், கொழும்பு 13, 09, 10, 15, 02, 10, 13 பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, ஒருவர் வெலிக்கடை மெகசின் சிறையில் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
100ஆவது மரணம்
கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 87 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த திங்கட் கிழமை (23) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமான மாரடைப்பு என, அறிவிக்கப்பட்டுள்ளது.
101ஆவது மரணம்
கொழும்பு 09, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 54 வயதான பெண் ஒருவர், மஹரகமை அபேக்ஷா வைத்தியசாலையில் வைத்து கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவ்வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், புற்றுநோயுடன் உக்கிரமடைந்த கொவிட்-19 தொற்று என, அறிவிக்கப்பட்டுள்ளது.
102ஆவது மரணம்
கொழும்பு 10, மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான பெண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு என, அறிவிக்கப்பட்டுள்ளது.
103ஆவது மரணம்
கொழும்பு 15, (மோதறை/மட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த, 36 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து, கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நாட்பட்ட நுரையீரல் நோயுடனான கொவிட்-19 தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.
104ஆவது மரணம்
கொழும்பு 02 (கொம்பனித்தெரு/ யூனியன் பிளேஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
105ஆவது மரணம்
கொழும்பு 10 (மருதானை/மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த, 58 வயதான பெண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நீரிழிவு, நாட்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
106ஆவது மரணம்
கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர் வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நாட்பட்ட நுரையீரல் நோய் மற்றும் ஆஸ்துமாவுடன் உக்கிரமடைந்த கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
107ஆவது மரணம்
வெலிக்கடை, மெகசின் சிறைச்சாலையில் இருந்த 70 வயதான ஆண் ஒருவர், சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் உக்கிரமடைந்த சிறுநீரக தொற்று என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொடர்பான மரணங்கள்
1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.
3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.
12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.
13ஆவது மரணம், செப். 14ஆம் திகதி, 60 வயதான, பஹ்ரைனிலிருந்து வந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
14ஆவது மரணம், ஒக்டோபர் 22ஆம் திகதி, 50 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
15ஆவது மரணம், ஒக்டோபர் 24ஆம் திகதி, 56 வயதான, குளியாபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
16ஆவது மரணம், ஒக்டோபர் 25ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 02 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
17ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 41 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
18ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 19 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
19ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொம்பனித்தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
20ஆவது மரணம், ஒக்டோபர் 30ஆம் திகதி, 54 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
21ஆவது மரணம், ஒக்டோபர் 31ஆம் திகதி, 40 வயதான, வெலிசறை மார்பு நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, மஹர பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
22ஆவது மரணம், நவம்பர் 01ஆம் திகதி, 68 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு, ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
23ஆவது மரணம், நவம்பர் 02ஆம் திகதி, 61 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15, மோதறை உயனவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
24ஆவது மரணம், நவம்பர் 03ஆம் திகதி, 79 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
25ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 46 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணித்த, கொழும்பு 02 (கொம்பனித் தெரு) ஐச் சேர்ந்த, ஆண் ஒருவர்.
26ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 68 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
27ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 58 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 12 (வாழைத்தோட்டம் பகுதி) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
28ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 73 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
29ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (மட்டக்குளி பகுதி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
30ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 23 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (மோதறை பகுதி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
31ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 42 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
32ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 69 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
33ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 67 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (வெல்லம்பிட்டி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
34ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 88 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (கணேமுல்ல) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
35ஆவது மரணம், நவம்பர் 08ஆம் திகதி, 78 வயதான, வைத்தியசாலையில் மரணமடைந்த ஆண் ஒருவர்.
36ஆவது மரணம், நவம்பர் 09ஆம் திகதி, 84 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கந்தானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
37ஆவது மரணம், நவம்பர் 08ஆம் திகதி, 55-60 வயதுக்குட்பட்ட, யார் என அடையாளம் காணப்படாத, ஆண் ஒருவர்.
38ஆவது மரணம், நவம்பர் 09ஆம் திகதி, 51 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, ராஜகிரியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
39ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 45 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
40ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 63 வயதான, கம்பஹா வைத்தியசாலையில் மரணமடைந்த, உடுகம்பொலவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
41ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, ராகமையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
42ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 80 வயதான, பொலிஸ் வைத்தியசாலையில் மரணமடைந்த, பாணந்துறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
43ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 40 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, புறக்கோட்டையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
44ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 45 வயதான, அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, களனியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
45ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 68 வயதான, வீட்டில் மரணமடைந்த, மாளிகாவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
46ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 63 வயதான, மஹரகம வைத்தியசாலையில் மரணமடைந்த, இம்புல்கொடவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
47ஆவது மரணம், நவம்பர் 12ஆம் திகதி, 54 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
48ஆவது மரணம், நவம்பர் 12ஆம் திகதி, 45 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, மீகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
49ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 83 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
50ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 68 வயதான, சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, சிலாபத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
51ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 69 வயதான, வைத்தியசாலையில் மரணமடைந்த, இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
52ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
53ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 64 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
54ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 54 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
55ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 39 வயதான, ஹோமாகம வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
56ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 88 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
57ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 79 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 08ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
58ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 88 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
59ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, மொரட்டுவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
60ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 70 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
61ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 75 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
62ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 65 வயதான, புனானை வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
63ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 69 வயதான, வீட்டில் மரணமடைந்த, இரத்மலானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
64ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 71 வயதான, வீட்டில் மரணமடைந்த, கிருலப்பனையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
65ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 81 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
66ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 82 வயதான, வீட்டில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
67ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 70 வயதான, வீட்டில் மரணமடைந்த, கந்தானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
68ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 74 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
69ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
70ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
71ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 27 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
72ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 59 வயதான, வீட்டில் மரணமடைந்த, பொகுணுவிட்டவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
73ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 86 வயதான, வீட்டில் மரணமடைந்த, ஹல்தோட்டவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
74ஆவது மரணம், நவம்பர் 20ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
75ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 57 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
76ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 65 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
77ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 89 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
78ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
79ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 72 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
80ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 69வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
81ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 76 வயதான, கொழும்பு முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 06ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
82ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 75 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெள்ளவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
83ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 76 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர்.
84ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
85ஆவது மரணம், நவம்பர் 20ஆம் திகதி, 53 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
86ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, பொரளையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
87ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 75 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
88ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 86 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, ஹெய்யந்துடுவவைச் சேர்ந்த பெண் ஒருவர்
.
89ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 60 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
90ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 60 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
91ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 74 வயதான, ராகமை போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, கினிகத்ஹேனவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
92ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 54 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, சியம்பலாபேவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
93ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 73 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
94ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 42 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, , அட்டளுகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
95ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 45 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
96ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 80 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பன்னிபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
97ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 87 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, பொரளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
98ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 80 வயதான, முல்லேரியா ஆதார ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பம்பலபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
99ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 73 வயதான, கொழும்பு தேசிய ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பேலியகொடவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
100ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
101ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 54 வயதான, மஹரகமை அபேக்ஷா வைத்தியசாலையில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
102ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, மருதானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
103ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 36 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
104ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 83 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
105ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 58 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
106ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 69 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
107ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 70 வயதான, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்த, ஆண் ஒருவர்.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 22,501 பேரில் தற்போது 6,168 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 16,226 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 107 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 650 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment