கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் கொழும்பில் மூடப்பட்டது வீதி..! - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் கொழும்பில் மூடப்பட்டது வீதி..!

கொழும்பு - பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை தற்காலிகமாக பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது அவர்களுக்குத் தொற்று ஏற்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னதாக பொரளையில் அமைந்துள்ள இரு உணவகங்கள் உட்பட ஆறு கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கடந்த சில நாட்களாக பொரளையில் அமைந்துள்ள குறித்த ஆறு கடைகளுக்கு சென்றதையடுத்து, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய ஆறு கடைகளும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment