தொழில் திணைக்கள சேவைகளை அந்தந்த பிரதேசங்களில் பெறவும் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

தொழில் திணைக்கள சேவைகளை அந்தந்த பிரதேசங்களில் பெறவும்

தொழில் திணைக்கள சேவைகளை தங்களது பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களிலேயே பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் தொடர்பான சகல நடவடிக்கைளும் நாட்டின் சகல பிரதேசங்களிலும் உள்ள அலுவலகங்கள் ஊடாக பரவலாக்கப்பட்டுள்ளதால், தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள குறித்த தொழில் திணைக்கள அலுவலகம் ஊடாக சகல சேவைகளும் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொழில் ஆணையாளர் நாயகம் ஏ. விமலவீர இன்று (12) விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தங்களுக்கு அவசிய சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பிரதான அலுவலகத்திற்கு வருகை தருவது அவசியமற்றது என்பதோடு, பிரதேச தொழில் திணைக்களத்தினால் குறித்த சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment