கொழும்பு மெனிங் சந்தைக்கு நவம்பர் வரை பூட்டு! - News View

About Us

About Us

Breaking

Saturday, October 24, 2020

கொழும்பு மெனிங் சந்தைக்கு நவம்பர் வரை பூட்டு!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கொழும்பு மெனிங் சந்தை நவம்பர் முதலாம் திகதி வரை மூடப்படவுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 22ஆம் திகதி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மெனிங் சந்தை மூடப்பட்டும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை அடுத்து பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில், மினுவாங்கொட கொரோனா கொத்தணியை அடுத்து ஏற்பட்டுள்ள கொரோனா அலையில், தற்போது பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட வைரஸ் பரவல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று பரவக் காரணமாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த மீன் சந்தையுடன் தொடர்புபட்ட தொற்று கண்டறியப்பட்ட காலி மற்றும் பேருவளை மீன்பிடித் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து, கொழும்பில் பிரதான மக்கள் புளக்கம் அதிகமுள்ள மெனிங் சந்தையை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment