மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச் சென்ற இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச் சென்ற இருவர் கைது

மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோதனைச்சாவடி ஒன்றில் நேற்று (12) இரவு 9 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளையும் சூட்சுமமாக மறைத்து அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் பகுதிக்கு எடுத்துச் செல்லும் போது சோதனைச் சாவடியில் வைத்து கைதாகினர்.

இவ்வாறு கைதானவர்கள் ஆலையடிவேம்பு, பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 37 வயதினை உடையவர்களாவர்.

கைதாகவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட இரு துப்பாக்கிகள் தொடர்பாக திருக்கொவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை நிருபர் ஷிஹான்

No comments:

Post a Comment