கிளிநொச்சி - பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார இணைப்புக்களுக்காக அங்கு அடுக்கபட்டிருந்த மின்கம்பங்களுக்கு இடையில், பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் குறித்த வாள்கள் நேற்று (சனிக்கிழமை) மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வாள்கள், எதற்காக அங்கு மறைத்து வைக்கப்பட்டது எனவும் யார் அதனை மறைத்து வைத்தார்கள் என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை இந்த பகுதியில், அண்மையில்தான் குறித்த மின்கம்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஏதேனும் குற்ற செயலிற்கான திட்டமிடல்கள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
No comments:
Post a Comment