அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தல்

எதிர்வரும் 3 நாட்களுக்குள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊழியர்களின் தற்போதைய முகவரி, தொலைபேசி இலக்கம் உள்ளிட்டவை தொடர்பிலேயே தகவல்களை சேகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் நிலையில் அவர் தொடர்பான தகவல்களை விரைவாக அடையாள காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது ஊழியர்கள் கொண்டுள்ள தகவல்களின் அடிப்படையில், அவர்களது தகவல்களை புதுப்பிக்குமாறும், அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Brandix நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை அடையாளம் காண முயற்சித்தபோது, அவர்கள் ஏற்கனவே வழங்கிய முகவரிகளில் அவர்கள் இல்லை என்பதோடு, அவர்களின் தொலைபேசி இலக்கங்களும் வேலை செய்யவில்லை என்பதால், குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துவதாக, அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment