வரலாற்று பிரசித்தி பெற்றதும் தொல்பொருள் ஆய்வகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதுமான சொரகுன ரஜ மகா விகாரை வளவில் புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட மூவர் பண்டாரவளை பொலிசாரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளைப் பகுதியிலேயே, மேற்படி வரலாற்று பிரசித்தி பெற்ற சொரகுன ரஜ மகா விகாரை அமைந்துள்ளது.
பதுளை மாவட்ட பொலிஸ் நிலையமொன்றின் பொலிஸ் சார்ஜன்ட்டாக கடமையாற்றி வந்த இவர் ஏனைய இரு இளைஞர்களையும் கூட்டிச் சென்று குறித்த இடத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்தனர்.
இது குறித்து சொரகுன ரஜ மகா விகாரைப் பொறுப்பாளரான சங்கைக்குரிய பன்சானந்த தேரர் பண்டாரவளை பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டிற்கமைய விரைந்த பொலிசார், குறித்த இடத்தை சுற்றி வலைத்து புதையல் தோண்டிய மூவரையும் கைது செய்தனர்..
இதையடுத்து குறித்த மூவரும் விசாரணையின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment