கட்டுநாயக்கவிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

கட்டுநாயக்கவிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா!

கட்டுநாயக்க பகுதியிலுள்ள ‘நெக்ஸ்ட்’ (NEXT) அப்பரல் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியின் பொது சுகாதார சேவை பரிசோதகர் தெரிவித்துள்ளார். 

குறித்த தொற்றாளர் சீதுவை ராஜபக்ஷபுரவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாவார். 

அவர் எவ்வாறு வைரஸ் பாதிப்புக்குள்ளானார் மற்றும் ஹொரான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தொடர்பாக இதுவரை வெளியிடப்படவில்லை. 

ஊழியருடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த தொழிற்சாலையில் உள்ள மற்ற ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment