(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனை கைது செய்ய பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் சிறிய குற்றச்சாட்டை முன்னிலைப்படுத்தி பாரதூரமான குற்றச்சாட்டை மூடிமறைக்க வேண்டாம். தவறுகளை திருத்திக் கொண்டு தண்டனை வழங்கவே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி நுகர்வோர் அதிகார சபையில் வழங்கப்பட்ட தொழில் நியமணத்தில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளன. இம்முறைக்கேடு தொடர்பில் உரிய விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக இன்று நுகர்வோர் அதிகார சபையில் முறைப்பாடளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment