விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நமல் ராஜபக்ஷவின் வன்னி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலிந்த விக்ரமசிங்க ஒரு நல்ல நிர்வாகி மட்டுமல்ல, ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் கூட என நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாலிந்த விக்ரமசிங்க கொழும்பு - 7 ரோயல் கல்லூரியில் உயர்தரம் வரை படித்துள்ளார். மேலும் அவருக்கு ரக்பி மற்றும் கால்பந்தில் கல்லூரி வண்ண விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
100 மீற்றர், 110 மீற்றர் தடகள போட்டி, நீளம் பாய்தல் போன்றவற்றிலும் அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக இருந்துள்ளார்.
பாடசாலைக் கல்வியை முடித்த பின்பு அவர் தனது குடும்ப வணிகத்திற்கு உதவினார். பின்னர் அவர் தனது சொந்த தொழிலைத் தொடங்கினார்.
2017 ஆம் ஆண்டில் நமல் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் அவர் கொழும்பு வடக்கின் லுனுபொக்குனவை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் இறங்கினார்.
பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜனா பெரமுனாவிலிருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவர் 1300 வாக்குகளைப் பெற்று வார்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரால் மாநகர சபையில் சேர முடியவில்லை, பின்னர் அவர் நமல் ராஜபக்ஷவுடன் அரசியலை தொடர முடிவு செய்தார்.
இந்நிலையில், அவருக்கு ஒருங்கிணைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment