ஊரடங்கு உத்தரவு காணப்படாத பகுதிகளுக்கு வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு விதிக்க இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் பிற ஊரடங்கு உத்தரவு காணப்படாத பகுதிகளுக்கு வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல் குறிப்பிட்டதை போன்று குறித்த பகுதிகளில் அதிகளவான கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டாலும், நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மாத்திரமே தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் மினுவாங்கொடைவில் கொரோனா பரவியதை போன்று நாடு முழுவதும் எவ்வளவு தூரம் கொரோனா வைரஸ் பரவியது என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை.
ஆகவே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment