பாராளுமன்றத்தின் 25 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

பாராளுமன்றத்தின் 25 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

பாராளுமன்றத்திலுள்ள 25 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொவிட்-19 ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தகவல் தருகையில், கொவிட்-19 பாதிக்கப்பட்டதாக சந்தேகத்துக்குரிய ஒருவருடன் நெருங்கிய தொடர்பிலுள்ள இருவருக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டது. அதில் கொவிட்-19 தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. 

அவர்களது சோதனையின் அடிப்படையில், பாராளுமன்றத்தின் ஏனைய அதிகாரிகளுக்கு பிசிஆர் சோதனை செய்யத்தேவையில்லை எனவும் அவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment