கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பொதுமக்கள் சேவைகள் தொடர்பில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (19) முதல், குறிப்பிட்ட சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, திகதியொன்றையும் நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு, உரிய அலுவலகத்திற்கு வருகை தருமாறு, திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்போது, அந்தந்த அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்திற்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு கட்டுப்பட்டு சேவைகள் வழங்கப்படும் என, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment