இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் டெங்குநோய் பரவுவதை தடுக்கும் வகையில், இம்மாதம் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஒருவார காலத்திற்கு தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக பெயரிடுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு 51,659 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததோடு, 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 105,049 ஆகும். டெங்குநோயினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 158 ஆகும். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27,870 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 33 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி, கம்பஹா, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களில் இந்த வருடத்தில் கூடுதலான நோயாளர்கள் பதிவான மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கட்டடங்களை நிர்மாணித்தல், தொழிற்சாலைகள், கழிவுப்பொருட்களை அகற்றுதல், நீரை சேமித்து வைக்கும் பீப்பாய்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், வாளி, பூச்சாடிகள் மற்றும் அகற்றப்படும் பொருட்கள் முதலானவை டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் என டெங்கு குடம்பி விஞ்ஞான ஆய்வு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலைமையின் காரணமாக சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவியமை காரணமாக நாடு முடக்கப்பட்டமையினால் வீடுகளில் தங்கியிருந்து துப்பரவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பொதுமக்களால் முடிந்தமை, பாடசாலை போன்ற பொது இடங்கள் மூடப்பட்டமை முதலான விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கொவிட்-19 வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை துப்பரவு செய்து டெங்கு நோய் பரவுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக ஆகக் குறைந்த வகையில் வாரத்திற்கு 30 நிமிடங்களையாவது சுற்றாடலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment