முழு கம்பஹா மாவட்டத்திற்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (21) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) அதிகாலை 5.00 மணி வரை தொடர்ச்சியாக ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திலுள்ள 19 பொலிஸ் பிரிவுகளில், கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, இந்நிலையில் நேற்றையதினம் (20) குளியாபிட்டி பகுதியிலுள்ள 5 பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment