மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு! - News View

About Us

About Us

Breaking

Friday, September 18, 2020

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!

மலையகத்தில் வானிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நேற்று (18) இரவு முதல் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக, சென். கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment