சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு

ஐ.எல்.எம் நாஸிம் 

பெப்ரவரி தொடக்கம் ஜூன் மாதத்திற்கான வீட்டு சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட 05 சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக பிரதேசத்தில் வசிக்கும் பயனாளிகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. 

காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (23) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா அவர்களின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

இதன் போது சம்மாந்துறை சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment