கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை (12) இரவு 10 மணி முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) 10 மணி வரை 12 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய மருதானை, பஞ்சிகாவத்தை (கொழும்பு 10), புறக்கோட்டை (கொழும்பு 11), புதுக்கடை (கொழும்பு 12), கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை (கொழும்பு 13), கிராண்ட்பாஸ் (கொழும்பு 14), மோதறை, மட்டக்குளி, முகத்துவாரம் (கொழும்பு 15) ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment