இலக்கு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது - பஷில் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

இலக்கு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது - பஷில் ராஜபக்ஷ

WikiLeaks: "STF Murdered Trinco Students" Basil To US - Colombo ...
(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எதிர்பார்த்துள்ளோம். இலக்கு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் சீர்செய்து சவால்களை வெற்றி கொள்ள முடியும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மெதமுல்ல டி.ஏ. ராஜபக்ஷ வித்தியாலயத்தில் இன்று வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி ஆட்சியமைத்து குறுகிய காலத்தில் தேசிய தேர்தல்களை வெற்றி கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலிலும் வரலாற்று ரீதியில் தடம் பதிக்கும். மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பு கொடுத்துள்ளமையினால் பொதுஜன பெரமுன தொடர்ந்து மக்களாணையை பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதில் மக்கள் அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எதிர்பார்த்துள்ளோம். எதிர்பார்ப்பு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

கொவிம் - 19 வைரஸ் தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தை ஜனாதிபதி கோத்தபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் சீர் செய்ய முடியும். அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள தயாராக உள்ளோம்.

சர்வதேச சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொதுத் தேர்தலை சிறந்த முறையில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதனை செயற்படுத்த உதவி புரிந்த சுகாதார தரப்பினர், பாதுகாப்பு தரப்பினர் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment