வீசா காலாவதியான நிலையில் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜைகள் மூவரும், அவர்களுக்கு உதவிய இலங்கை பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (30) மாலை கல்கிஸ்ஸை பகுதியில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விரிவான விசாரணைகளை திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment