உலகம் முழுவதும் 8 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - புரட்டி எடுக்கும் கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

உலகம் முழுவதும் 8 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - புரட்டி எடுக்கும் கொரோனா

உலக நாடுகளை புரட்டி எடுக்கும் கொடிய ...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரத்து 649 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 90 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 694 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 12 ஆயிரத்து 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 1,80,604
பிரேசில் - 1,14,772
மெக்சிகோ - 60,254
இந்தியா - 56,706 
இங்கிலாந்து - 41,429
இத்தாலி - 35,437
பிரான்ஸ் - 30,513
ஸ்பெயின் - 28,838
பெரு - 27,663
ஈரான் - 20,643

No comments:

Post a Comment