கண்டி - குருணாகல் பிரதான வீதியின் கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 2 வயதுடைய சிறுமியொருவரம், அவரது தந்தையும் (36 வயது) உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொள்கலன் லொறியொன்றுடன் காரொன்று மோதியதாகவும், பின்னர் அக்காரானது மேலும் ஒரு கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இரு கார்களில் பயணித்த ஐந்து பேரும், லொறியும் சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கலகெதர மற்றும் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது இரண்டு வயது சிறுமியும் அவரது தந்தையும் உயிரிழந்துள்ள நிலையில், ஏனையவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நிலம்பா பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment