ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உள்ளுர் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர பயிர் சிகிச்சை முகாம் முதன் முறையாக ஏறாவூர் நகர விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இடம்பெற்றதாக விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர விவசாயப் போதனாசிரியர் பிரிவில் உள்ள மீராகேணி வாராந்த சந்தைப் பிரதேசத்தில் வியாழக்கிழமை 03.07.2020 இடம்பெற்ற இந்த பயிர் சிகிச்சை முகாமில் வீட்டுத் தோட்டங்களில் பீடைகளின் தாக்கத்தினாலும், வீரியம் இல்லாமலும் பாதிக்கப்பட்ட வீட்டுத் தோட்டப் பயிர்கள் காட்சிப் படுத்தப்பட்டதுடன் அவற்றுக்கான இயற்கை முறை பீட நோய்க கட்டுப்பாட்டு முறைகளும் பயிர் வளமாக்கி முறைகளும் தெளிவூட்டப்பட்டன.
விவாசயிகளின் காலடிக்கே வந்து இவ்வாறாதொரு விழிப்புணர்வு பயிர் சிகிச்சை முகாமை நடத்தியிருப்பதன் மூலமும் தொடர்ந்து மாதாந்தம் குறிப்பிட்ட தினத்தில் இவ்வாறான சிகிச்சை முகாம் நடாத்தப்பட இருப்பதன் மூலம் உள்ளுர் விவசாயிகளான தாங்கள் பெரும் நன்மை அடைந்திருப்பதாக வீட்டுத் தோட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
பயிர் சிகிச்கை முகாம் நிகழ்வில் விவசாய உதவிப் பணிப்பாளர் ஈ. சுகுந்ததாஸன், பாடவிதான உத்தியோகத்தர்களான எம். ருபேஷினி, என். விவேகானந்தராஜா, மட்டக்களப்பு வடக்கு வலய விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயத் தொழினுட்ப உதவியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏறாவூர் நகர விவசாயப் போதனாசிரியர் பிரிவின் மாதாந்த நிரந்தர பயிர் சிகிச்சை முகாம் பிரதி மாதமும் முதல் வியாழக்கிழமை தினத்தன்று காலை 10 மணி தொடக்கம் இடம்பெறும் என்று விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment