யானையின் கொழும்பு கோட்டையை மொட்டு கைப்பற்றியே தீரும் : சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Thursday, July 30, 2020

யானையின் கொழும்பு கோட்டையை மொட்டு கைப்பற்றியே தீரும் : சுசில் பிரேமஜயந்த

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ...
(இராஜதுரை ஹஷான்)

யானை சின்னத்தின் கொழும்பு கோட்டையை மொட்டு சின்னம் இம்முறை முழுமையாக கைப்பற்றும். ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கொழும்பு மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளை கூட பெறாது. நாடு தழுவிய ரீதியில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 2ம் திகதியுடன் நிறைவுபெறும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை திட்டங்களை தேர்தல் பிரசாரமாக்கியுள்ளோம். எமது தேர்தல் பிரசாரங்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளது. அபிவிருத்திக்கான பொது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடு தழுவிய ரீதியில் அமோக வெற்றி பெறும். ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு கோட்டையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இம்முறை முழுமையாக கைப்பற்றும். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள். இருவரும் 30 சதவீத வாக்குகளை கூட பெறமாட்டார்கள்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களை செயற்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெறுவது இன்றியமையாதது. நல்லாட்சி அரசாங்கம் போன்று பயனற்ற அரசாங்கம் தோற்றம் பெற்றால் பாரிய விளைவுகள் மீண்டும் தோற்றம் பெறும். என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேணடும் என்றார்.

No comments:

Post a Comment