மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகளையும் தொழில் வாய்ப்பினையும் ஒரே நேரத்தில் பெற்றுக் கொடுத்தது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம். அதேபோன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷதான் இந்த நாட்டின் 10 வருடத்திற்கு ஜனாதிபதி. அந்த அரசாங்கத்தின் ஒரே பங்காளி கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதனூடாக மலையகத்தின் பாரிய தொழில் வாய்ப்புக்களையும் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் பொது பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பொதுஜன பெரமுனவில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டம் ஒன்று இன்று (26) ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில். இன்று சில மலையக அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள. தமிழ் பேசும் போது ஜனாதிபதி வந்தால் வெள்ளை வேன் வரும். என கூறுகிறார்கள். ஆனால் சிங்களத்தில் பேசும் போது வேறு ஒன்றை பேசுகிறார்கள். அவ்வாறான தலைவர்கள்தான் இன்று மலையகத்தில் இருக்கிறார்கள்.
அதேநேரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த தேர்தலில் போட்டியிட்டாலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் வந்து ஆதரவளிப்பது மட்டு அல்லாது ஆசிர்வாதத்தினையும் செலுத்தி சென்றுள்ளனர். இன்றும் அவ்வாறேதான் ஜனாதிபதியும் பிரதமரும் எமக்கு பெரும் சக்தியாக உள்ளனர். என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளரும் வேட்பாளருமான ஜீவன் தொண்டமான், கணபதி கணகராஜ் , பேராசியர் ஜி.எல் பீரிஸ் உட்பட இ.தொ.கா வின் முக்கியஸத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மலையக நிருபர் சுந்தரலிங்கம்
No comments:
Post a Comment