தென் கொரியாவிலிருந்து 262 பேர் இலங்கை வருகை - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

தென் கொரியாவிலிருந்து 262 பேர் இலங்கை வருகை

கொவிட்-19 தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், தென் கொரியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 262 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விமானத்தில், குறித்த குழுவினர் தென்கொரியாவின் சியோல் நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (02) வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் தொழில்வாய்ப்புக் கருதி தென்கொரியாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்த குழுவினர் ஆவர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இக்குழுவினர் வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment