ஓகஸ்ட் 01இல் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 22, 2020

ஓகஸ்ட் 01இல் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானம்

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நேற்று (22) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இம்முடிவிற்கு கல்வி அமைச்சும் இணங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்று நிலையை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வார கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் திங்கட்கிழமை (27) தரம் 11, 12, 13 (க.பொ.த. சா/த மற்றும் உ/த) மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இராஜங்கனை மற்றும் வெலிகந்த உள்ளிட்ட பகுதிகளிலும் ஏனைய மாணவர்களினதும் கல்வி நடவடிக்கைகள் தேர்தலையடுத்து, ஓகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என, கல்வி அமைச்சு கடந்த திங்கட்கிழமை (20) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment