வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 3, 2020

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி குளத்துமடுப் பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் 37 வயதுடைய குடும்பஸ்தரொருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பிரேமரத்ன வழிகாட்டலில் விசேட அதிரடிப்படையினர்களின் சுற்றிவளைப்பின் போது, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி, குளத்துமடுப் பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கட்டுத்துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தும் ஈயக்குண்டுகளுடன் 37 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப்படையினரால் கைப்பற்றப்பட்ட கட்டுத்துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தும் ஈயக்குண்டுகள் மற்றும் கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபரொருவரையும் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட சட்டவிரோதச் செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனைத்தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை கைது செய்யும் வகையிலும் பொலிஸார், விசேட அதிரடிப்படைப்படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

No comments:

Post a Comment