கடந்த நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன்களை நிதி அமைச்சு செலுத்துகிறது - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

கடந்த நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன்களை நிதி அமைச்சு செலுத்துகிறது - அமைச்சர் பந்துல

(ஆர்.யசி)

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அரச நிறுவனங்களிடம் பெற்றுக் கொண்ட சேவைகளுக்காக வழங்கப்பட வேண்டிய 240.7 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்படவில்லை எனவும் இந்த அரசாங்கம் அவற்றில் 196.6 பில்லியன் ரூபாய்களை செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரச நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பணம் 240.7 பில்லியன் ரூபாய்கள் வழக்கப்படவில்லை என பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் சேவைகளை பெற்றுக் கொண்டும், கேள்விமனுக்கோரப்பட்ட வேலைத்திட்டங்கள் என சகலதிற்குமாக கொடுக்க வேண்டிய நிதியே இதுவாகும்.

எனினும் இந்த கடன் தொகையில் 196.6 பில்லயன் ரூபாய்களை நிதி அமைச்சு இதுவரையில் செலுத்தியுள்ளதாகவும் இன்னமும் 44 பில்லியன் ரூபாய்கள் வழங்க வேண்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இப்போது நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு சற்று தாமதமாகவேனும் இந்த கடன்களை கட்டி முடிப்பதாகவும் பிரதமர் அமைச்சரவையில் தெரிவித்துள்ளார் என்றார்.

No comments:

Post a Comment