சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட S-14 ரக புகையிரதத்தின் பரீட்சார்த்த சேவை இன்று (02) இடம்பெற்றது.
கொழும்பிலிருந்து ஹட்டன் வரையில் குறித்த S-14 ரக புகையிரதம் பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டதாக, ஹட்டன் புகையிரத சேவை கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை வரையான புகையிரத சேவையில் S-12 ரக புகையிரதமே சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும் குறித்த புதிய புகையிரதம் இனிமேல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம்.கிருஸ்ணா)
No comments:
Post a Comment