போதையில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

போதையில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாகலை சீர்பாத பிரிவில் நேற்றுமுன்தினம் (27) இரவு போதையில் தவறி வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர், வெலிவோயா பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கணேசன் கண்ணதாசன் (36) என்பவராவர்.

இவர் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், மதுபோதையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறு பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில், தலையில் பலத்த காயம், கழுத்தில் முறிவு ஏற்பட்டமையால் உயிரிழப்பு சம்பவித்ததாக, மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி லியத்த பிட்டிய குறிப்பிட்டார்.

(மஸ்கெலியா விஷேட நிருபர் - செ.தி.பெருமாள்)

No comments:

Post a Comment