அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்த தகவல் வெளியானவுடன் தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தன்னுடைய அதிர்ச்சியையும் வெளியிட்டார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவையும் அமைச்சர் தொண்டமான் இன்று மாலை சந்தித்து முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து பேசியதாகத் தெரியவருகின்றது.
தொண்மானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கும் அரசாங்கத்துக்குப் பாரிய இழப்பு என இது குறித்து பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.
பூதவுடல் ஜயரத்ன மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பூதவுடல் பெரும்பாலும் பாராளுமன்றத்தில் வைக்கப்படலாம் எனத் தெரிகின்றது. நாளைய தினம் இது குறித்து முடிவெடுக்கப்படும்.
No comments:
Post a Comment