பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும், இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் மக்கள் பீதியடையத்தேவையில்லையெனவும், இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயமெனவும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.
தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும், இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில், இன்று சனிக்கிழமை (16) இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில், கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும், இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை. இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயமாகும்.
இது போன்ற நிலைமைகள் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்டது. அதனால் அபாய நிலைமைகள் அனர்த்தங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும், இது தொடர்பாக மக்கள் அச்சமடையத்தேவையில்லை. இது அனர்த்த நிலைமைகள் ஏற்படுவதற்கான நிகழ்வுகளல்ல என அவர் அறிவித்துள்ளார்.
எனவே, மக்கள் வதந்திகளைப்பரப்பி அல்லது நம்பி இந்தச்செய்திகளை பரப்பாமல் இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார். மேலும், இது அபாய நிலைமை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமல்ல. தற்பொழுது இலங்கையில் தாழமுக்க நிலை காணப்படுவதனால், கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கடலில் அதிகமான, உயரமான கடல் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment