ஜனாதிபதி அரசமைப்பை எந்த வகையிலும் மீறவில்லை - கெஹெலிய ரம்புக்வெல - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

ஜனாதிபதி அரசமைப்பை எந்த வகையிலும் மீறவில்லை - கெஹெலிய ரம்புக்வெல

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி புதிய சட்டங்களை இயற்ற வேண்டிய தேவையில்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நாட்டை நிர்வகிப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானவை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசமைப்பை எந்த வகையிலும் மீறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிர்வாகம் இடம்பெறும் முறை குறித்து எதிர்கட்சிகள் திருப்தியடையவில்லை அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நடவடிக்கை குறித்து அரசாங்கத்திற்கு எந்தவித கரிசனையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment