எஸ்.எம்.எம்.முர்ஷித்
அனுமதிப்பத்திரத்தினை மீறிய முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள், ஏற்றி வந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சந்தேக நபரும் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு அனுமதிப்பத்திரத்தினை மீறிய வகையில் மாடுகளை சித்திரவதைக்கு உட்படுத்தும் விதத்தில் கொண்டு செல்லப்பட்ட பதினாறு மாடுகள் மற்றும் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயற்பாடுகளை பிடிப்பதற்கு பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment