நான்காம் மாடியில் முன்னாள் நிதி அமைச்சர் மங்களவிடம் 4 மணி நேர சி.ஐ.டி. விசாரணை - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 19, 2020

நான்காம் மாடியில் முன்னாள் நிதி அமைச்சர் மங்களவிடம் 4 மணி நேர சி.ஐ.டி. விசாரணை

(எம்.எப்.எம்.பஸீர்) 

நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 225 பஸ்களில் 12 ஆயிரம் வாக்காளர்களை வட மாகாணத்துக்கு அழைத்து சென்றமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளின் ஒரு அங்கமாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இன்று 2 ஆவது தடவையாகவும் விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

ஏற்கனவே இந்த விவகாரத்தில் கடந்த மே 14 ஆம் திகதி சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட மங்கள சமரவீர அங்கு 5 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக இன்று முற்பகல் 10.00 மணிக்கு மீள சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்ட மங்கள சமரவீர, பிற்பகல் 2.00 மணி வரை அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. 

தேர்தல் சட்ட மீறல் மற்றும் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில், ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற இந்த விவகாரத்தை மையப்படுத்திய முறைப்பாட்டுக்கமைய சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. 

இது குறித்து கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி, சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டிருந்த போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த இடம்பெயர்ந்த 12 வாக்காளர்களையும், வட மாகாணத்தில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க அனுப்பி வைக்க 225 பஸ் வண்டிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டதையும், நீண்ட நாள் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் அமைச்சின் தலையீட்டுடன் அந்த விடயம் இடம்பெற்றுள்ளமையும் குறித்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது, அவ்வாறு வாக்காளர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுக்க நிதி அமைச்சிடம் இருந்து எழுத்து மூலம் அனுமதி பெறப்பட்டதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டதாகவும் ரிஷாட் சார்பில் சி.ஐ..டி. விசாரணைகளின் போது கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. 

இந்நிலையிலேயே, அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன. குறித்த வாக்காளர்களை அழைத்து செல்ல 95 இலட்சம் ரூபாவை நிதி அமைச்சர் என்ற ரீதியில் மக்கள சமரவீர அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இதனிடையே இந்த விவகாரத்தில் தன்னை சி.ஐ.டி. சாட்சிகள் இன்றி கைது செய்ய முயல்வதாகவும், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment