மேல் மாகாணத்தில் சிக்கித்தவித்த மேலும் 1,200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 7, 2020

மேல் மாகாணத்தில் சிக்கித்தவித்த மேலும் 1,200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்

(எம்.எப்.எம்.பஸீர்) 

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் இன்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே நுகேகொடை பொலிஸ் வலயத்தில் 600 பேர் வரை கடந்த 5 ஆம் திகதி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதே பொலிஸ் வலயத்திலிருந்து இன்று 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

23 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். 

ஏற்கனவே முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் களனி பொலிஸ் பிரிவில் இவ்வாறு சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த 370 பேர் கடந்த சனிக்கிழமை 2 ஆம் திகதி பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டனர். 

மேல் மாகாண ஆளுநர், மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ரொஷான் குணதிலகவின் திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழி நடாத்தலில், இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment