இந்தோனேஷியாவிலிருந்து 110 பேர் இலங்கை வருகை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 20, 2020

இந்தோனேஷியாவிலிருந்து 110 பேர் இலங்கை வருகை

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் இந்தோனேஷியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 110 பேர், நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் கருடா விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தில் இன்று (21) காலை 8.00 மணியளவில் குறித்த குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தோர், தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment