நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

கொவிட் 19 தொற்று பரவலுடன் உருவாகியுள்ள பொருளாதார நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (31) இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகளை சந்தித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர், பிரதி ஆளுநர்கள், வங்கி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு பொறுப்பான உதவி ஆளுநர் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பணிப்பாளர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் நிதி திரவத்தன்மையை பேணுதல் மற்றும் நிதி வசதிகளுக்கான ஏற்பாடுகள் குறித்த வழிநடத்தல் முகாமைத்துவத்திற்காக இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அந்நியச் செலாவணி வரவு செலவுத்திட்டம் மற்றும் வெளி கையிருப்பு முகாமைத்துவத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் இலங்கையின் பிணைமுறிகளில் முதலீடு செய்வோரிடம் அதிகபட்ச நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கி அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.

அனைத்து வங்கிகளையும் திறந்து வைக்குமாறு மத்திய வங்கிக்கு அறிவித்த ஜனாதிபதி அவர்கள், கொவிட் 19 பிரச்சினைக்கு பின்னரான காலத்திற்குறிய பொருளாதார மூலோபாயங்களை வகுக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.

திறைசேறி செயலாளரும் கலந்துரையாடலில் பங்குபற்றினார்.

No comments:

Post a Comment