அஸீம் கிலாப்தீன்
கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் 22 மாணவிகள் 9 A சித்திகளையும் 12 மாணவிகள் 8A சித்திகளையும் 8 மாணவிகள் 7 A சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளதாக அதிபர் நஸ்ரியா முனாஸ் தெரிவித்தார்.
ஆங்கில மொழி மூலம் 10 மாணவிகளும் தமிழ் மொழி மூலம் 8 மாணவிகளும் சிங்கள மொழி மூலம் 4 மாணவிகளும் 9 பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளனர். 12 மாணவிகள் 8A 1B சித்திகளை பெற்றுள்ளதாகவும் இதன் அடிப்படையில் க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்க 70.45 சதவீதமானோர் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆங்கில மொழி மூலத்தில் 91% ஆனோரும் தமிழ் மொழி மூலத்தில் 79% ஆனோரும் சிங்கள மொழி மூலத்தில் 48% ஆனோரும் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment