(நா.தனுஜா)
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கக் கூடிய எந்தவொரு பயணிகள் விமானமும் விமான நிலையத்தில் தரித்து நிற்பதற்கான கால அளவு 12 மணித்தியாலங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பயணிகள் வருவதற்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.
எனினும் குறித்தவொரு நாட்டிலிருந்து பிறிதொரு நாட்டிற்குப் பயணிக்கும் விமானம் (Transit flights) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்காலிகமாகத் தரித்துச் செல்வதற்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் அத்தகைய விமானங்கள் இலங்கையில் தரித்து நிற்பதற்கான கால அளவு 12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
எனினும் அவ்விமானங்களில் வருகைதரும் பயணிகள் அனைவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே சென்றடைவதற்கான ஒரு இலக்கைக் கொண்டிருப்பது கட்டாயமாகும் என்றும் அது தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment