5 ஆயிரம் பேர் தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல யாழில் விண்ணப்பம் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 25, 2020

5 ஆயிரம் பேர் தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல யாழில் விண்ணப்பம்

யாழ் மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகை தந்த வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய சொந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், விண்ணப்பித்தவர்களில் சுமார் 2000 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் இன்றைய நாள் வரை விண்ணப்பித்த 5000 பேரில் சுமார் 2000 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும், அதி இடர் வலயமாக கருதப்படும் மாவட்டங்களுக்கு செல்வதற்காக விண்ணப்பிப்பவர்கள் தற்போதைய நிலையில் அனுப்பப்படமாட்டார்கள் என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment