ஊரடங்கு சட்டத்தை மீறிய 13,468 பேர் கைது - 3,353 வாகனங்கள் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

ஊரடங்கு சட்டத்தை மீறிய 13,468 பேர் கைது - 3,353 வாகனங்கள் கைப்பற்றல்

நேற்று (04) காலை 6.00 மணி முதல் இன்று 6.00 காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 1,245 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, இக்காலப்பகுதியில் 336 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 20ஆம் திகதி முதல் நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (05) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 13,468 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,353 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment