Online சேவை வழியாக மாத்திரம் பொலிஸ் அனுமதி (Clearance) சான்றிதழ்கள் வழங்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

Online சேவை வழியாக மாத்திரம் பொலிஸ் அனுமதி (Clearance) சான்றிதழ்கள் வழங்கப்படும்

இணைய வழி ஒன்லைன் (Online) முறை மூலமாக மாத்திரம் பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance) வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. எனவே, அடையாளம் காணப்படாத நோய்த் தொற்றுடையவர்கள் சமூகத்தில் காணப்பட வாய்ப்பு இருக்கலாம் என்பதால், பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்படும் நற்சான்றிதழை, Online முறை மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களை ஏற்கும், கொழும்பு மாவட்ட, பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம், இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment