(எம்.எப்.எம்.பஸீர்)
தற்போதைய 34 ஆவது பொலிஸ் மா அதிபரான பூஜித் ஜயசுந்தர, தற்சமயம் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள நிலையில், இன்று மார்ச் 15 ஆம் திகதியுடன் அவரது பதவிக் காலம் நிறைவு பெற்றது.
1960 மார்ச் 15 ஆம் திகதி பிறந்த பூஜித் ஜயசுந்தர இன்று மார்ச் 15 ஆம் திகதி 60 வயதை பூர்த்தி செய்யும் நிலையில், அந்த திகதியுடன் அவரது பதவிக் காலம் நிறைவடையும்.
இந்நிலையில் அடுத்த பொலிஸ் மா அதிபருக்கான போட்டிகள் தற்போதே பொலிஸ் திணைக்களத்துக்குள் ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் முன்னணியில் மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருந்த போதிலும் ஒருவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் ஏனைய இருவருக்கும் இடையே போட்டி நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment