கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்த இரண்டாவது நபர் அடக்கம் செய்யப்பட்டார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்த இரண்டாவது நபர் அடக்கம் செய்யப்பட்டார்

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியை நேற்று (30) நள்ளிரவு இடம்பெற்றது.

நீர்கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான பொது மயானத்தில் சர்வதேச தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய இவரது இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளின் பங்களிப்புடன் குறித்த இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இவரது இறுதிக் கிரியையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டனர். 

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள போருத்தோட்டையைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த இரண்டாவது நபர் ஆவார்.

அத்தோடு குறித்த நபர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு, நீண்ட நாள் சுவாசப் பிரச்சினை கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இலங்கையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பகைப்பட உதவி 
சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவா ராமசாமி

No comments:

Post a Comment