இன, மத, மொழி, சாதி ரீதியில் தேர்தல் காலங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்கவும் - சர்வ மத தலைவர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

இன, மத, மொழி, சாதி ரீதியில் தேர்தல் காலங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்கவும் - சர்வ மத தலைவர்கள்

இன, மத, மொழி, சாதி ரீதியில் தேர்தல் காலங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு கிளிநொச்சி மாவட்ட சர்வ மத தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர். அதேவேளை மக்கள் சுயமாக சிந்தித்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர். 

வாக்காளர்கள் தமது வாக்குரிமையை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் பார்க்காமல் அதனை ஜனநாயகத்தினுடைய ஒரு அங்கமாக பார்த்து சரியான தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட சர்வ மத நல்லிணக்க குழுவினர் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர். 

கிளிநொச்சி மாவட்ட சர்வமத நல்லிணக்க குழுவினர் நேற்று (09-03-2020) கிளிநொச்சியில் அமைந்துள்ள சோலைவனம் விடுதியில் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

பலம் வாய்ந்த ஒரு ஆயுதம் வாக்குரிமை அதனை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் நாங்கள் பார்க்காமல் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக நாங்கள் பார்த்து சரியான தலைவர்களை மக்களுடைய உரிமைகளுக்காக கரிசனை உடையவர்களை தெரிவு செய்வதற்கு என்னுடைய வாக்குரிமையை பயன்படுத்த வேண்டுமெனவும் மத துவேஷங்கள் இனத்துவேசங்களி்கும், தங்களுக்கு நாங்கள் இடம் கொடுக்க கூடாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். 
இதேவேளை வாக்களிக்காமல் ஒருவரும் இருக்கக்கூடாது கட்டாயமாக குறித்த நேரத்திற்கு நாங்கள் சென்று வாக்களிக்கும்படி வாக்காளர்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். அரசியல் என்பது பொதுவானது எதற்கும் வாக்களிக்கலாம் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று யாரை நம்பக்கூடாது மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

அந்த வகையில் ஆலயங்களில் ஒரு கட்சியில் சார்பான கருத்துக்களை கட்சி ரீதியாக ஆலயங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதை ஆலயங்களில் தவிர்க்குமாறும் அவர்கள் தெரிவித்தனர். 

ஆலயங்களின் முக்கிய நோக்கம் ஆன்மீகம் ஆகும். எல்லோர் மீதும் அன்பு செலுத்து ஆண்மீகள் கற்றுத்தரும் பாடமாகும். நாங்கள் அதனை அரசியலாக கொண்டு வரக்கூடாது. அதனை பின்பற்ற வேண்டும் என்பதை மனதார ஏற்றுக்கொண்டு தேர்தல் காலங்களில் நாடு முழுவதும் இந்து மதத் தலைவர்கள் அரசியல்வாதிகளுக்கு நேரடியாக வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருந்தார்கள் அதை நாங்கள் எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

மதங்களையும், இனங்களையும், சாதியம் உள்ளிட்டவற்றை இலக்குவைத்து கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைகளை மக்கள் நிராகரித்துள்ளனர். குறித்த செயற்பாடுகளை இனம் காண்டு கடந்த காலங்களில் செயற்பட்டது போன்று இம்முறையும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
மதங்கள் அனைத்தும் அன்பையே போதிக்கின்றது. அதனை ஒருபோதும் அரசியலாக பயன்படுத்தக்கூடாது. மக்கள் நிதானமாகவும், அனைவரையும் நேசிக்கின்ற வகையிலும் செயற்பட வேண்டும். 

இலங்கையில் உள்ள பிரஜை எந்த மதத்தினையும், எந்த இனத்தவரையும் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய முடியும். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும். சுயமாக சிந்தித்து வாக்களிக்கும் உரிமை மக்களிற்கு உண்டு. அதனை குழப்பும் வகையிலும், மத, இன வாதங்களை ஏற்படுத்தம் வகையிலும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடாது தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

நடைபெறவுள்ள தேர்தல் அமைதியாக இடம்பெறவும், அனைத்து பிரஜைகளும் வாக்களித்து தமது உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர்கள், வாக்களிப்பு என்ற உரிமையை அனைவரும் பயன்படுத்த வே்ணடும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். அனைவரும் ஒரே இனம், ஒரே மக்கள் என்ற சிந்தனை வளர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

குறித்த ஊடக சந்திப்பில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment