(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதனடிப்படையில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் ஆகக்கூடிய உறுப்பினர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தெரிவாக இருப்பதுடன் ஆகக்குறைந்த உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட இருக்கின்றனர்.
அதன் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 19 உறுப்பினர்களும், கம்பஹா மாவட்டத்தில் 18, களுத்துறையில் 10, கண்டி 12, மாத்தளை 05, நுவரெலியா 08, காலி 09, மாத்தறை 07, அம்பாந்தோட்டை 07, யாழ்ப்பாணம் 07,வன்னி 06 மட்டக்களப்பு 05, திகாமடுல்ல 07, திருகோணமலை 04, குருணாகல் 15, புத்தளம் 08 அநுராதபுரம் 09, பொலன்னறுவை 05, பதுளை 09, மொனராகலை 06, இரத்தினபுரி 11 மற்றும் கேகாலை மாவட்டத்தில் இருந்து 09 உறுப்பினர்கள் என இவ்வாறு 196 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர்.
அத்துடன் கட்சிகளின் வேட்புமனுவில் அந்ததந்த மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் மொத்த உறுப்பினர்களின் தொகையைவிட 3 உறுப்பினர்களின் பெயர்கள் மேலதிகமாக இடப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 19 ஆம் திகதி முடிவடைகின்றது.
No comments:
Post a Comment