கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தி வைக்க சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது.
நாளை (15) இது நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை அந்நாட்டு உட்துறை அமைச்சு இன்று (14) அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 24 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவ்வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86ஆக அந்நாட்டில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த இரு வார காலப்பகுதியினுள் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் சில விமானங்கள் சேவையில் ஈடுபடும் எனவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment